Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, 2 February 2009

ஒரு பாவம் காதலன்....

துணிகளை உலர வைப்பதற்காக எனை ஏன்
தலை கீழாக கட்டி
தொங்க விடுகிறாய் பெண்ணே.

போன ஜென்மத்தில் உன்னை
காதலித்த பாவத்திற்கு
இந்த ஜென்மத்தில்
இப்படி ஒரு தண்டனையா????
இன்னும் உனக்கு போதவில்லையா????


(ஹேமா அவர்களின் பின்னூட்டக் கவிதை சிறப்பாக இருப்பதால் பதிவுடன் இணைக்கிறேன்)

அன்பே பார்த்தாயா
ஒன்றுக்கும் உதவாதவன் என்பாயே
இதற்காகவாவது...!

இது தண்டணை அல்ல
உனக்கு உதவ
இதன் வழி மட்டுமே
நீ எனக்கு!

வரமாய் தந்துவிடு
வாழ்வு முழுதுமே
தலைகீழாய் தொங்க என்று!!!

Tuesday, 20 January 2009

ஏழை, பணக்காரன்


ஏழை, பணக்காரன், எப்படி அறியலாம் வித்தியாசம்.....

கஞ்சி

ஏழை குடித்தால் வறுமை
பணக்காரன் குடித்தால் எளிமை.

Wednesday, 31 December 2008

மனது....

விட்டில் பூச்சி போல்
வெளிச்சம் என்று நினைத்து
விளக்கில் வீழ்ந்து மடியும்....

கடற்கரையோரம்
கால் பாதங்கள்
தேடி நடக்கும்.....

நிழலை நிஜம்
என்று கருதி
கனவுக்குள்
கூடு கட்டும்...


மொத்தத்தில்
ஒன்றை மற்றும்
மறந்து விடும்.....

வாழ்க்கை
உடைந்து
வீழக்
காத்து நிற்கும்
ஓடு பாத்திரம் என்பதை ????



Sunday, 14 December 2008

கவிதை


கவிதை

அரும்பு மீசை பருவத்தில் ஒரு வார இதழில் படித்தது (சத்தியமாக நான் எழுதவில்லை)

தென்றலாய் எனைத் தழுவிவிடு இன்றேல்

தேய் பிறை யாக்கிக்கொன்றுவிடு

பூவை என்மேல் சூட்டிசெல் இன்றேல்

சாவை அடைய வழியை சொல்

உதட்டை திறந்து அழைத்து விடு இன்றேல்

உயிர்த் தீயை அணைத்துவிடு

நீ வந்தால் எனக்கு பூக்காடு இன்றேல்

அழைப்பு விடுக்கும் சாக்காடு

LIFE IS A PROCESS OF ADJUSTMENT

SUCCESS IS NOT A PERMANENT & FAILURE IS NOT FINAL, SO NEVER STOP WORKING AFTER SUCCESS & NEVER STOP TRYING AFTER FAILURE................